Austerlitz நிலையத்தில் மூவர் கைது! - ஒருவர் ஆயுதத்துடன்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
Austerlitz நிலையத்தில் மூவர் கைது!  ஒருவர் ஆயுதத்துடன்..!!

நேற்று செவ்வாய்க்கிழமை Austerlitz நிலையத்தில் மூவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
நேற்று செவாய்க்கிழமை 15:00 மணி அளவில் இந்த பரபரப்பான இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SNCF அதிகாரிகள் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்துள்ளார். 
 
காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு, மூவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆயுதம் வைத்திருந்த நபர் தொடரூந்து நிலைய கழிவறையில் ஆயுதத்தை மறைக்க முற்பட்டதாக அறிய முடிகிறது. மேலதிக தகல்கள் வெளியாகவில்லை.
 
 

மூலக்கதை