Porte de la Chapelle - அகதிகளுக்கிடையே மூன்று நாட்களாக குழு மோதல்! - 17 பேர் கைது!!
போர்த்து லா சப்பல் பகுதியில் அகதிகளுக்கிடையே இடம்பெற்ற குழு மோதலில், பலர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் உயிருக்கு போராடி வருகின்றார்.
இந்த மோதல் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. முதலில் இரண்டு சிறு குழுக்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. தலையிட்ட காவல்துறையிர், மூவரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு மணிநேரம் ஆன நிலையில், மீண்டும் மோதல் வெடித்தது.
இம்முறை ஆஃப்கானிஸ்தான் மற்றும் எரித்திரியாவைச் சேர்ந்த 50 அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி பெரும் மோதலில் ஈடுபட்டனர். மீண்டும் தலையிட்ட காவல்துறையினர், கண்ணீர் புகை வீசி அகதிகளை கலைத்தனர். இதில் 27 பேர் காயமடைந்தனர்.
மறுநாள் சனிக்கிழமை, மீண்டும் மோதல் வெடித்தது. இம்முறை காவல்துறையினருக்கு எதிராக அகதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் எட்டு அகதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் இடம்பெற்று பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக 17 பேர் மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இப்பகுதியில் இருந்து 300 அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றிருந்தனர். அதன் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
