Porte de la Chapelle - அகதிகளுக்கிடையே மூன்று நாட்களாக குழு மோதல்! - 17 பேர் கைது!!
போர்த்து லா சப்பல் பகுதியில் அகதிகளுக்கிடையே இடம்பெற்ற குழு மோதலில், பலர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் உயிருக்கு போராடி வருகின்றார்.
இந்த மோதல் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. முதலில் இரண்டு சிறு குழுக்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதில் கத்திக்குத்து சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. தலையிட்ட காவல்துறையிர், மூவரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு மணிநேரம் ஆன நிலையில், மீண்டும் மோதல் வெடித்தது.
இம்முறை ஆஃப்கானிஸ்தான் மற்றும் எரித்திரியாவைச் சேர்ந்த 50 அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி பெரும் மோதலில் ஈடுபட்டனர். மீண்டும் தலையிட்ட காவல்துறையினர், கண்ணீர் புகை வீசி அகதிகளை கலைத்தனர். இதில் 27 பேர் காயமடைந்தனர்.
மறுநாள் சனிக்கிழமை, மீண்டும் மோதல் வெடித்தது. இம்முறை காவல்துறையினருக்கு எதிராக அகதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் எட்டு அகதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் இடம்பெற்று பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தமாக 17 பேர் மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இப்பகுதியில் இருந்து 300 அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றிருந்தனர். அதன் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
