யூதர் என்பதால் பக்கத்து வீட்டுக்காருக்கு சரமாரி கத்திக்குத்து! - கொல்ல முற்பட்ட நபர் கைது!!
நபர் ஒருவர் தனது அண்டை வீட்டில் வசிக்கும் நபர் ஒருவரை கொல்ல முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை Bourdon, (Abbeville மற்றும் Amiens நகர்களுக்கு இடையே உள்ள சிறு கிராமம்) எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழம, நபர் ஒருவர் கூரான கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் யூதர் ஒருவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார். குறித்த யுதரை, எட்டு தடவைகள் கத்தியால் குத்தியுள்ளார். முகத்திலும் சில வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவத்தில் மற்றுமொரு நபர் தலையிட்டு, காவல்துறையினரை வரவழைத்தனர். காயமடைந்த 58 வயதுடைய நபரை உயிருக்காபத்தான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய 18 வயது நபருக்கும் கைகளில் காயமேற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் அறியமுடிகிறது. தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இன்றி, வெறுமனே ஒருவர் யூதர் என்பதாக் அவரை கொல்ல முற்பட்டதால் இச்செய்தி பெரும் பரபரபுக்கு உள்ளாகியுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
