பிரான்சில் 700,000 அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள்! - அதிர்ச்சி தகவல்!!
சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம் என்று இல்லாமல் நாடு முழுவதும் இந்த சாரதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. Seine-et-Marne இல் தினமும் ஓட்டுனர் உரிமம் இன்றி பயணிக்கும் சாரதிகள் கைது செய்யப்படுகின்றார்கள். கடந்த பத்து வருடங்களில் இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
<<நான் வேலை பார்த்து பணம் சேர்த்து சாரதி அனுமதி அத்திரம் எடுப்பது மிக சிரமமாக காரியமாக உள்ளது>> என சாரதிகள் குற்றம் சாடியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் தரப்பில், <<அவர்களிடம் வாகனங்கள் உள்ளது. ஆனால் சாரதி அனுமதி பத்திரம் பெற பணம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது>> என தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிட்டதில் நாட்டில் மொத்தமாக 680,000 சாரதிகள், அனுமதி பத்திரம் இன்று வாகனங்கள் செலுத்துகின்றனர்.
அதேவேளை, சாரதி அனுமதி பத்திரம் இன்றி கைது செய்யப்படும் நபர்களுக்கு €15,000 கள் வரை தண்டப்பணம் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. <<அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள் விபத்துக்குள்ளாகுவதால் மேலும் பல பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றனர்>> எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
