ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை! - அதிர்ச்சி தகவல்!!
ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொள்வதாக காவல்துறை சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை கடந்தவருடத்தை விட கணிசமாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் மூன்று காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக 24 அதிகாரிகள் தமது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என காவல்துறை சங்கம் அறிவித்துள்ளது.
CFDT காவல்துறை தொழிற்சங்க பொது மேலாளர், Denis Jacob தெரிவிக்கும் போது, <<ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒரு அதிகாரி எனும் கணக்கில் தற்கொலைகள் இடம்பெறுகின்றது. இது மிக மிக அதிகமாகும். கடந்த வருடத்தில் இந்த அளவான தற்கொலை ஓகஸ்ட் மாதத்தில் தான் தொட்டிருந்தது>> என அவர் குறிப்பிட்டார்.
1996 ஆம் ஆண்டு 70 அதிகாரிகளும், 2000 ஆம் ஆண்டில் 54 அதிகாரிகளும், 2005 இல் 50 அதிகாரிகளும், 2008 ஆம் ஆண்டில் 49 அதிகாரிகளும், 2014 ஆம் ஆண்டில் 55 அதிகாரிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
