Yvelines - பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு! - காரணத்தை தேடி அதிகாரிகள்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
Yvelines  பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு!  காரணத்தை தேடி அதிகாரிகள்..!!

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Eure-et-Loir இல் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் சக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. 
 
இன்று ஏப்ரல் 7 ஆம் திகதி, Guainville  (Eure-et-Loir) நகரில் இருந்து அதிகாலை 2 மணி அளவில் இந்த பெண் அதிகாரியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த அதிகாரி Yvelines மாவட்டத்தின் கெளரவத்துக்குரிய commissariat de Conflant-Sainte-Honorine அதிகாரியாகும். 
 
தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துக்குள் இருந்து தனது சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார் என காவல்துறையினர் முதல் கட்டமாக தெரிவித்துள்ளனர். இது தற்கொலையாகத்தான் இருக்கும் என தாம் சந்தேகிப்பதாக அறிவித்துள்ளனர். 
 
கடந்த ஒருமாத காலத்துக்குள் Yvelines மாவட்டத்தில் இடம்பெறும் காவல்துறை அதிகாரிகளின் இரண்டாவது தற்கொலை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை