முதல் தோல்விக்கு தோனி கூறும் காரணம்!

PARIS TAMIL  PARIS TAMIL
முதல் தோல்விக்கு தோனி கூறும் காரணம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
 
ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
 
மொத்தம் 56 போட்டிகள் இந்த தொடரில் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
 
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதிலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ரூணல் பாண்டியா 42 ரன்களும், கடைசி ஓவரில் ஒரு காட்டு காட்டிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்கள் எடுத்தது.
 
இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அம்பத்தி ராயூடு (0), சேன் வாட்சன் (5) மற்றும் சுரேஷ் ரெய்னா 16 என முதல் மூன்று வீரர்கள் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
 
இதனையடுத்து 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறிய நிலையில் களமிறங்கிய தோனியும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேதர் ஜாதவ் தனி ஒருவனாக போராடி 58 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
 
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி பேசியதாவது;
 
சில விசயங்கள் தவறாக சென்றதாக உணர்கிறேன். துவக்கத்தில் சிறப்பாக துவங்கிய நாங்கள் கடைசி கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். பீல்டிங்கில் நிறைய கேட்ச்களை விட்டது போட்டியை எங்களுக்கு எதிராக மாற்றிவிட்டது. கடைசி கட்டத்தில் பந்துவீச்சு அவ்வளவு பிரமாதமாக இல்லை. இந்த தோல்வியில் இருந்து சில விசயங்களை கற்றுள்ளோம். அடுத்தடுத்த போட்டிகளில் தவறை சரி செய்து கொள்வோம். பிராவோவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது, அவரது இடத்தை நிரப்புவதற்கு கூட சரியான வீரர்கள் தற்பொழுது இல்லை. ஏற்கனவே லுங்கி நிகிடி மற்றும் டேவிட் வில்லே ஆகியோர் இல்லை, இதன் காரணமாகவே மைதானத்தின் தன்மையை பொறுத்து வீரர்களை மாற்றி மாற்றி இறக்கி வருகிறோம்” என்றார்.
 
 

மூலக்கதை