சிறையில் இருக்கும் சசிகலாவை பாடாய் படுத்தும் தேர்தல் ஆணையம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக சமூக வலைத்தளங்ளில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இச்சூழலில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தொடர் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதன் எதிரொலியாக, தேர்தல் அதிகாரிகளையும் ஒருவர் பின் ஒருவராக மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் தரப்பினர் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துவதாக அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக, இரட்டை இலை சின்னத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்து பதிலளிக்க அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 6) காலை 11 மணிக்குள் இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்றும் அவகாசம் அளித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
