வடக்கில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நல்லூர்ப் பிரகடனம்
வடக்கில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நல்லூர்ப் பிரகடனம் என்றதொரு பிரகடனம்; நல்லூர் ஆலய முன்றலில் வைத்து வெளியிடப்படவுள்ளது.
வட மாகாணத்தில் பல இடங்களிலும் தனியாருக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் வடக்கில் பாரிய பிரச்சனையாகவே தற்போது காணப்படுகின்றது.
இதே வேளை மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களிலும் மற்றும் முஸ்லீம்களிலும் உள்ள மக்களின் இன்றைய நிலைமைகள் மிக மன வேதனையை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இந் நிலையில் அவர்களின் உண்மை நிலைமைகளை எடுத்தியம்புவதையும் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலுமே இந்தப் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பிழற்பகல் 3 மணியளவில் நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதாக மேற்படி அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
