‛மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல’: பொன் ராதாகிருஷ்ணன்
‛மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல, இந்த விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது’ என மத்திய இணை அமைச்சசர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
காஷ்மீர்- கன்னியாகுமரி தங்க நாற்கர சாலை கன்னியாகுமரி அருகே நரிக்குளத்தில் ரூ.21 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த மத்திய இணை அமைச்சசர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் மூன்று முறை என்னை சந்தித்துள்ளனர். இரண்டு முறை விவசாயம், நிதி. நீர்வளத்துறை அமைச்சசர்களை சந்தித்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் மாநில அரசு சம்பந்தப்பட்டது. அவர்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாங்கள் மாநில முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளோம்.
தமிழக அரசு வறட்சி நிவாரண நிதியாக 39 ஆயிரம் கோடி மற்றும் புயல் நிவாரண நிதியாக 22 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டது. மத்திய அரசு வறட்சி நிவாரணத்துக்கு 1,748 கோடியும், புயல் நிவாரணத்துக்கு 226 கோடியும் ஒதுக்கியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நிறுத்த கூடாது. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக தேர்தலை நிறுத்தக் கூடாது. அனைத்து அதிகாரமும் கொண்டு தேர்தல் ஆணையம் அதை தடுத்து நிறுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மைல் கல்லில் எழுதுவது இந்தி திணிப்பு அல்ல.
மைல் கல்லில் இந்தி எழுத கூடாது என்று தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 2004-ல் தி.மு.க.,வை சேர்ந்த மத்திய அமைச்சசர் பாலு காலத்தில்தான் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. லாரி ‛ஸ்டிரைக்’ பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
