ஆர்.கே.நகரில் 100 பறக்கும் படையினர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்ஹா இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் பேசிய அவர்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒரு ஷிப்டிற்கு 10 பறக்கும் படை வீதம் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 145 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு பணிக்காக 1694 மத்திய பாதுகாப்பு படையினர் வர உள்ளனர்.
கொடி அணிவகுப்பு இன்றோ, நாளையோ நடத்தப்படும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 4 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன.
தேர்தல் தொடர்பாக பணியாளர்களுக்கு நாளை 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதவரை சிறு சிறு மோதல்கள் மட்டுமே நடந்துள்ளன. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.
இன்று முதல் வாக்காளர் சீட்டு வழங்கும் பணி துவங்கப்படும். ஆள் மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
