அ.தி.மு.க. உயிர்வாழ போராடுகிறது: ப. சிதம்பரம்
தமிழ்நாட்டில் நடந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு உயிர்வாழ போராடிக் கொண்டிருக்கிறது என்று ப. சிதம்பரம் கூறினார்.ப. சிதம்பரம் எம்.பி. எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது.
அப்போது ப. சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நடந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த அரசு உயிர்வாழ போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.அந்த கட்சியில் உள்ள 130 எம்.எல்.ஏ.க்களும் இன்னும் 4 ஆண்டு காலம் எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒற்றுமையாக இருந்தால் தான் இதை காப்பாற்ற முடியும் என்பதற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை குலைந்துவிட்டால் அரசும் தானாக கவிழ்ந்து விடும். எனவே ஆட்சியை நீடித்து கொண்டு செல்வது மிகக் கடினமானதாகவே இருக்கும்.
அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்தாலும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அது எதிரொலிக்கும் என்ற சொல்ல முடியாது. இடைத்தேர்தல் என்றாலே பண பலம், அதிகார பலம், போலீஸ் பலம் தான் எதிரொலிக்கிறது. அதை வைத்து தான் முடிவுகள் இருக்கும்.
ஆனால் உள்ளாட்சி தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ வந்தால் மக்களுடைய உண்மையான முடிவு வெளிப்படும். அ.தி.மு.க. பிரிந்து இருப்பதால், அது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்குமா என்பதை பற்றி நான் சொல்ல முடியாது.
இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
