400 பயணிகளுடன் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் திடீர் தரையிறக்கம்!
உலகின் மிகப்பெரிய விமானங்களின் ஒன்றான A-360 ரக விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானம் , டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துள்ள நிலையில் , விமான பணிப்பெண்ணொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 10.25 மணியளவில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் 400 க்கும் அதிகமான பயணிகள் மற்றும் 11 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
சுகயீனமுற்ற பணியாளர் ஒருவர் நீர்க்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் , பிற்பகல் 12.15 மணியளவில் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதன்போது , விமானத்திற்கு 65 ஆயிரம் லீட்டர் எரிபொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிரப்பப்பட்டுள்ள நிலையில் , அதன் பெறுமதி 72 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
