கார்த்தி என் கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டால்...: ராதிகா சரத்குமார்
சென்னை: சரத்குமார் சிவக்குமாரை பற்றி முன்பு பேசியதால் கார்த்திக்கு அவர் மீது கோபம். கார்த்தி என் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டால் மீடியாவை கூட்டி சரத் மீதான புகார்களை நிரூபிக்குமாறு அவர்களை கேட்பேன் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மீது ஊழல் புகார் சுமத்தி அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளனர். இந்த நீக்கத்திற்கு தனிப்பட்ட விரோதம் காரணம் என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,
சரத்குமார் சிவக்குமாரை பற்றி முன்பு பேசியதால் கார்த்திக்கு அவர் மீது கோபம். அவரின் தந்தை மீது தப்பு என்பதை கார்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கார்த்தியிடம் கேள்வி கேட்டு ட்வீட் செய்துள்ளேன். ஆனால் அவர் ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை. ஒரு கிரிக்கெட் போட்டி நடத்த அவர்கள் எதற்காக கோடிக் கணக்கில் செலவு செய்தார்கள் என தெரியவில்லை.
நானும் சிபிஎல்-ல் பங்கேற்றேன். ஒரு போட்டியை நடத்த நாங்கள் எவ்வளவு செலவு செய்தோம் என எனக்கு தெரியும். இது பற்றி எல்லாம் நான் நிச்சயம் கேள்வி கேட்பேன். கார்த்தி என் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டால் மீடியாவை கூட்டி சரத் மீதான புகார்களை நிரூபிக்குமாறு அவர்களை கேட்பேன்.
போலீஸ் அறிக்கையில் கூட இதற்கு எல்லாம் தனிப்பட்ட விரோதம் காரணம் என தெளிவாக எழுதப்பட்டுள்ளது. நான் மீடியாவை அழைக்கப் போவது விரைவில் நடக்கும்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
