மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 10 சதவீதம் உயர்த்தியது மோடி தான் எச்.ராஜா பேட்டி

தினமலர்  தினமலர்
மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 10 சதவீதம் உயர்த்தியது மோடி தான் எச்.ராஜா பேட்டி

விருதுநகர்:32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மோடி வந்தபின் 42 சதவீதமாக உயர்த்தினார் என விருதுநகரில் பா.ஜ., செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்க மறுக்கிறது என கூறுவது தவறு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய நிதி பங்கு 32 சதவிகிதமாக இருந்தது.

மாநிலத்தின் நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்தார். பிரதமராக மோடி வந்த உடனே மத்திய நிதி கமிஷன் பரிந்துரையை ஏற்று 42 சதவிகிதமாக மாநிலங்களுக்கான நிதி பங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது.

இது சட்டமாக கொண்டுவந்த போது தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா பாராட்டியும் உள்ளார்.

சென்னை வெள்ள நீர் வடிகால் அமைப்பதற்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவாகியது என தெரிவித்தனர். தற்போது அத்துறை அமைச்சர் 42 சதவிகிதம் மட்டுமே செலவாகி உள்ளதாக தெரிவிக்கிறார். அதில் மீதமுள்ள 58 சதவிகித பணத்தை என்ன செய்தனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிக வருவாய் வழங்குகின்றன. இந்த நிதியை மற்ற மாவட்டங்களுக்கு செலவழிக்க கூடாது என மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கூறினால் என்ன செய்வர். தேர்தல் நேரத்தில் திருட்டுத்தனமாக மக்களிடையே பொய்யான கருத்துக்களை இண்டியா கூட்டணி கட்சிகள், கழகங்களை சேர்ந்தவர்கள் பரப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் 2014 தேர்தலில் கழகங்களின் கூட்டணி இல்லாமல் 19.5 சதவீத ஒட்டுக்களை பா.ஜ., பெற்றது.

தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் டாஸ்மாக், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மதுவை ஒழித்து விடுவோம் என தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.

எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இன்னும் அதிக இளம் விதவைகள் உருவாவதற்கு கனிமொழியும், தி.மு.க., அரசும் தான் காரணம், என்றார்.

விருதுநகர்:32 சதவீதமாக இருந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மோடி வந்தபின் 42 சதவீதமாக உயர்த்தினார் என விருதுநகரில் பா.ஜ., செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.அவர் மேலும்

மூலக்கதை