தமிழகத்தில் 90 பெண்கள் எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக வாய்ப்பு

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் 90 பெண்கள் எம்.எல்.ஏ.,  எம்.பி.,யாக வாய்ப்பு




மகளிர் மசோதா நிறைவேறினால், தமிழகத்திலிருந்து, 77 பெண்கள் எம்.எல்.ஏ.,வாகவும், 13 பெண்கள் எம்.பி.,க்களாகவும் தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.

லோக்சபா மற்றும் சட்ட சபையில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கு நாடு முழுதும் பெண்களிடம் குறிப்பாக, தமிழகத்திலுள்ள பெண்கள் மத்தியில், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏனெனில், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது.

தமிழகம் முன்னோடி



ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலேயே, அதாவது 1920ம் ஆண்டிலேயே, இந்தியாவின் முதல் சட்டசபை உறுப்பினராக முத்துலெட்சுமி ரெட்டி, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில்தான் ஜெயலலிதா, ஜானகி என இரண்டு பெண்கள் முதல்வர்களாக இருந்துள்ளனர். தமிழக உள்ளாட்சிகளில் இப்போது பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

சில உள்ளாட்சிகளில், பெண் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, 50 சதவீதத்துக்கும் அதிகமாகஉள்ளது. பெண் மேயரைக் கொண்ட கோவை மாநகராட்சியில், மொத்தமுள்ள, 100 கவுன்சிலர்களில், 55 பேர் பெண்கள்.

மேயரைத் தவிர்த்து, கோவையிலுள்ள ஐந்து மண்டலங்களில், மூன்று மண்டலங்களின் தலைவராகவும் பெண்கள் உள்ளனர்.

இப்படி அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் பெண்களுக்கான பங்களிப்பு, அதிகமாகவே உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்ட பின், தமிழகத்தில் எவ்வளவு பெண்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது, 234 சட்டசபை தொகுதிகளும், 39 லோக்சபா தொகுதிகளும் தமிழகத்தில் இருக்கின்றன. இவற்றில் முறையே, 77 மற்றும் 13 என்ற எண்ணிக்கையில், பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் வாய்ப்புள்ளது.

ஆனால், 33 சதவீதம் ஒதுக்கீடு என்பதைக் கணக்கிடும்போது, இதை விடக் கூடுதல் எண்ணிக்கையிலேயே, பெண்களுக்கு ஒதுக்கீடு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சி



உதாரணமாக, கோவையில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், 33 சதவீத ஒதுக்கீடு என்று கணக்கிடும்போது, நான்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது இங்கு ஒரு பெண் எம்.எல்.ஏ., மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் மூன்று பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று, தற்போது இங்குள்ள மூன்று லோக்சபா தொகுதிகளில், ஒரு தொகுதி கூட பெண்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

இனிவரும் நாட்களில், ஒரு தொகுதி கண்டிப்பாக பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்பதால், அதிலும் ஒரு பெண் எம்.பி., உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில், அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



அதில், மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியுமென எனக்கூறி உயர் நீதிமன்றம், அந்த வழக்கை முடித்து வைத்தது. பல ஆண்டுகளுக்குப் பின், இப்போது மகளிர் மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.அதேபோல், தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு, 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசுப் பொதுப் பணியாளர் சட்டத்தின் பிரிவு -26 இன் கீழ், கடந்த 2016ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது.



- நமது சிறப்பு நிருபர் -

@subboxhd@மகளிர் மசோதா: பெண்கள் மகிழ்ச்சி@@subboxhd@@மகளிர் மசோதா நிறைவேறினால், தமிழகத்திலிருந்து, 77 பெண்கள் எம்.எல்.ஏ.,வாகவும், 13 பெண்கள் எம்.பி.,க்களாகவும் தேர்வு செய்யப்படும்

மூலக்கதை