பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தல்

  தினமலர்
பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தல்

நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும், எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கை தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று மாசுப்படுதல் பிரச்னையும் அதிகரிக்கும்.

இதனால் பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அரசுகள் வலியுறுத்துகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளை அருகிலுள்ள நகரங்களுடன் இணைக்கும் வகையில் டவுன் சேவையை அதிகாலை துவங்கி இரவு 11:00 மணி வரை இயக்கிட பயண நேர அட்டவணை தயாரித்து வட்டார போக்குவரத்து துறையில் அனுமதியும் பெறுகின்றனர். இந்த பஸ் சேவைகளை பயணிகள் கூட்டம் இருக்கும் நேரங்களில் தடையின்றி இயக்கி வருமானம் பார்க்கின்றனர். ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் இரவு நேர கடைசி டிரிப்பை மாவட்டத்தில் பரவலாக பெரும்பாலான வழித்தடங்களில் அரசு, தனியார் பஸ்கள் இயக்குவதில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து நகர் பகுதிகளுக்கு விரைவு பஸ்கள் மூலம் வந்திறங்கும் பயணிகள் அதிக செலவில் வாடகை ஆட்டோ, கார் பிடித்து தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இந்த வசதியும் இல்லாத இடங்களில் பல கி.மீ.,துாரம் இரவு நேரங்களில் ரோடுகளில் அச்சத்துடனே நடந்து செல்லும் நிலை உள்ளது.

அனுமதி பெற்ற அனைத்து டிரிப்பகளையும் அரசு, தனியார் பஸ்கள் முறையாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும், எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கை தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று

மூலக்கதை