சட்டரீதியாக பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க முயற்சிகளை மேற்கொள்வோம் சசிகலா

தினத்தந்தி  தினத்தந்தி
சட்டரீதியாக பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க முயற்சிகளை மேற்கொள்வோம் சசிகலா

சென்னை,

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. போராட்டக்களத்திற்கு இளைஞர்கள், பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் முக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

சென்னை மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தை கைவிட வேண்டும் எனில் 3 முக்கிய கோரிக்கைகளை இளைஞர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து  ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார். இது தொடர்பாக இது குறித்து முதல்வர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். சட்டதிருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.அவசர சட்டத்தினை பிறப்பிக்கும்படி பிரதமரை வலியுறுத்த உள்ளேன்.மாணவர்கள் இளைஞர்களின் போராட்டம் நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

ஜல்லிகட்டு விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சட்டரீதியாக பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க முயற்சிகளை மேற்கொள்வோம். அவசர சட்டம் மூலம் ஜல்லிகட்டு மீதான தடையை தடை நீக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

இவ்வாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர்  சசிகலா கூறியுள்ளார்.

மூலக்கதை