சென்னை மெரினாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்

தினத்தந்தி  தினத்தந்தி
சென்னை மெரினாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்


சென்னை, 
 ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. போராட்டக்களத்திற்கு இளைஞர்கள், பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் முக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
சென்னை மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் நிலையை காணமுடிகிறது.  பீட்டாவிற்கு பாடை
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் பீட்டா அமைப்பிற்கு பாடை கட்டி ஊர்வலமாக சென்றனர். பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். 
சென்னை மெரினாவில் மட்டும் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இளைஞர்கள் குவிந்து உள்ளனர். 

மூலக்கதை