முதல்வர் ஜெயலலிதா கண்ணு முழிச்சுட்டாங்க!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
முதல்வர் ஜெயலலிதா கண்ணு முழிச்சுட்டாங்க!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவமனை தரப்பு கூறியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை தரப்பில் கூறினாலும், அவரை பார்க்க யாரையும் அனுமதிக்காதது பல சந்தேகங்களை சாதரண மனிதருக்கும் எழுப்பி வருகிறது. முதல்வர் நலமுடன் மீண்டும் வர வேண்டும் என பலரும் கோயில் கோயிலாக வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தஞ்சாவூரில் உள்ள அவர்களது குல தெய்வம் கோயிலுக்கு சென்று முதல்வருக்காக சிறப்பு பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பூஜைகள் நடத்திய மறுநாள் அதே கோயிலுக்கு சென்ற திவாகரன் அம்மா கண்ணு முழிச்சுட்டாங்க, நம்ம வேண்டுதல் வீண் போகலை. மறுபடியும் பூஜை செய்யனும் என சந்தோஷத்தில் கூறியதாக பேசப்படுகிறது.

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு இந்த தகவல் வந்ததால் முதல்வர் நலமுடன் வந்துவிடுவார் என அதிமுகவினர் சற்று நிம்மது பெருமூச்சு விடுகின்றனர். அதிமுக வட்டாரத்தில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. சசிகலா வட்டாரத்தில் இருந்து வந்திருக்கும் முதல் நல்ல தகவல் என கூறுகிறார்கள்.

மூலக்கதை