ஜெ.,க்கு ஏதாவது நடந்தால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன்!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ஜெ.,க்கு ஏதாவது நடந்தால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழகமே முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனித்து வருகிறது. முதல்வரை அவரது தோழி சசிகலா கவனித்து வருகிறார்.

சசிகலா தான் முதல்வருக்கு தேவையான அனைத்தையும் அருகில் இருந்து கவனித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் தான் பல நாடுகளுக்கு பயணம் செய்து பல மருத்துவர்களை சந்தித்து முதல்வருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் சசிகலா குறித்தான பல எதிர்மறையான கருத்துக்களும் பலராலும் பேசப்படுகிறது. இந்த சூழலில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முதல்வர் ஜெயலலிதா குறித்தான மருத்துவ தகவல்களை வெளியிட நீதிமன்றத்தை நாடினார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஜெயலலிதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ய சசிகலா முயல்வதாகவும், அதற்கு அப்பல்லோ நிறுவனமும் துணை போவதாகவும் கூறியுள்ளார். சிறந்த மருத்துவர்கள் பலர் இருக்க, சசிகலா தரப்பு தனது குடும்ப மருத்துவர்களை வைத்தே ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறது என்றும் அவர் பரபரப்பு புகார்களை கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு அப்பல்லோ மருத்துவமனையும் சசிகலாவும் தான். அவர்களை சிறையில் தள்ளுவேன் என்றார் பரபரப்பாக.

மூலக்கதை