கனடா: தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்டவர் கொல்லப்பட்டார்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்ட்ராத்ரோய் நகரில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவர் போலீஸ் நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளார்.
மக்கள் கூடும் பொது இடத்தில், மேற்கூறிய சந்தேகிக்கப்பட்டவர் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திட திட்டமிட்டிருந்தார் என்று தங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட நபர் உள்ளூரில் ஆரோன் டிரைவர் என்று அழைக்கப்பட்டுள்ளார். 24 வயதாகும் இந்த நபர், சமூகவலைதளத்தில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை வெளிப்படையாக ஆதரித்ததற்காக கடந்த ஆண்டு, கைது செய்யப்பட்டார்.