பொலிவியா: சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல்

BBC  BBC
பொலிவியா: சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், சுரங்கத் தொழிலாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்துள்ளன.

இந்த மோதல்களில், பலரும் காயமடைந்துள்ளனர். மேலும், சில போலீஸ் அதிகாரிகள் பிணைக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மத்திய மலைப் பகுதிகளில், சுரங்கத் தொழிலாளர்கள் அமைத்திருந்த முற்றுகை தடுப்புகளை பாதுகாப்பு படையினர் அகற்ற முயற்சி செய்த போது, மோதல்கள் வெடித்துள்ளன.

தொழிற்சங்க சட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள சில மாற்றங்களை எதிர்த்து இந்த சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை