மாணவனின் மரணத்தை நீக்கி சாதனை படைத்திட உதவி கரம் நீட்டுங்கள்!

தமிழ்வின்  தமிழ்வின்
மாணவனின் மரணத்தை நீக்கி சாதனை படைத்திட உதவி கரம் நீட்டுங்கள்!

சிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் மாற்றவேண்டிய நிலையில் வாழ்வா சாவா என்ற கேள்வியுடன் கல்வியை தொடரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மாணவனின் மரண போராட்டம் இது.

வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஜெகதீஸ்வரன் பவித்திரன்

போரில் மடிந்த மாவீரனின் மகன், சிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்டு இரண்டு சிறுநீரகமும் மாற்றவேண்டிய நிலையில், வாழ்வா சாவா என்ற கேள்வியுடன் கல்வியை தொடரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றார்.

குறித்த மாணவன் சிறப்பாக கல்வி கற்கும் திறனுடையவர்.

நோயின் தாக்கத்தால் அவரின் கல்வி நிலை தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அவரின் நோய் குணப்படுத்த முடியாத ஒன்று அல்ல ஆனால் நிதி என்பது அவர்களுக்கு பற்றாகுறையாக காணப்படுவதாக கவலை வெளியீட்டுள்ளார் பாடசாலை முதல்வர்.

குறித்த மாணவனின் தந்தை தமீழிழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இனைந்து போராடி அவர் இருதி யுத்தத்தில் கப்டன் முல்லைமணி என்னும் பெயரில் விதையாகிவிட்டார்.

பவித்திரனுக்கும் அவன் தந்தைக்கும் ஒரே இரத்தப்பிரிவு என்பதால் முல்லைமணி உயிருடன் இருந்தால் ஒரு சீறுநீரகத்தை கொடுத்து உதவியிருப்பார் என்று அவனின் தாயார் குறிப்பிடுகின்றார்.
 
தன்மகன் நோயினால் வாடுவதைவிட தந்தையின் அரவனைப்பு இல்லையே என்ற ஏக்கம்தான் அவனுக்கு அதிகமாக இருக்கின்றது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலமாக தன்உயிரை தீயாகம் செய்த அந்த மாவீரனின் மகனின் முடிவு சாதரன மரணத்தில் முடியுமா அல்லது சாதனை படைத்திட முடியுமா?

இதற்கு பதில் உதவும் அன்பு நெஞ்சங்களின் கைகளிள் தான் இருக்கின்றது!

உதவி கரம் நீட்டுங்கள் இந்த மரண மரண போராட்டத்திற்கு..!

தொடர்புகளுக்கு.

PHONE NO :  0094775278620 
A/C NO : 70054227
BANK OF CEYLON (BOC)
NAME : JEGATHEESWARAN RAJASREE
ADDRESS : PALAIYAVAADI PULIYANKULAM
VAVUNIYA

மூலக்கதை