சுமித் மரணம் தொடர்பில் அம்பலமான முக்கிய சாட்சிகள்

தமிழ்வின்  தமிழ்வின்
சுமித் மரணம் தொடர்பில் அம்பலமான முக்கிய சாட்சிகள்

அண்மையில் எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் சுமித் பிரசன்னவின் மரணம் தொடர்பில் முக்கிய சாட்சி நீதிமன்றில் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் ஊமை இளைஞன் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று எம்பிலிப்பிட்டிய பதில் நீதவான் பிரசன்ன பெர்ணாண்டோ முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஊமை இளைஞனின் வாக்குமூலத்தில் சுமித்தின் மரணம் தொடர்பில் பல முக்கிய சாட்சிகள் முன்வைக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி விஜித பீ.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை