பெண்கள் தற்கொலைப்படைகளாக மாறுவது எப்படி?

NEWSONEWS  NEWSONEWS
பெண்கள் தற்கொலைப்படைகளாக மாறுவது எப்படி?

வெடிகுண்டுகளை கக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள், விரோதியின் கழுத்தை பின்பகுதியிலிருந்து அறுத்து எடுங்கள், ஏனெனில் பின் கழுத்தை அறுத்தால் விரைவில் மரணம் சம்பவிக்கும், மேலும் போராட்டத்தையும் தவிர்க்கலாம்.

தற்கொலைத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் தங்கள் கூடைகளில் அல்லது தங்கள் உடைகளில் வெடிகுண்டுகளை மறைத்து எடுத்துச் சென்று மீன் சந்தை, அல்லது நெரிசலான மார்க்கெட் பகுதிகளில் வெடிக்கச் செய்ய வேண்டும்.

பள்ளிகள் மட்டுமல்லாது, இந்த வன்முறைக்கு அஞ்சி முகாம்களின் தங்கியுள்ளவர்களையும் எப்படி தாக்கி அழிக்க வேண்டும் என்பதும் போகோஹாரம் கொடுஞ்செயல் திட்டங்களில் பிரதான பங்கு வகிக்கிறது.

பெண்களை தீவிரவாதிகளாக மாற்றும் போகோஹாரம் பயங்கரம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நைஜீரியாவில் பள்ளி ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்து 300 மாணவிகளைக் கடத்திச் சென்றனர், அவர்கள் நிலவரம் என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.

மேலும் பிற 100 பெண்களும் கடத்தப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

சில வேளைகளில் புதிய தலைமுறை பயங்கரவாதிகளை உருவாக்க சில பெண்களை கர்ப்பிணிகளாக்குவதும் அங்கு நடந்து வருகிறது.

ஐஎஸ் அமைப்புடன் இணைந்ததாக அறிவித்துள்ள போகோஹாரம், 2012-ம் ஆண்டு முதல் சுமார் 2,000 பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கடத்தியுள்ளனர்.

இதில் பெண்களே ஆயுதம் தாங்கிகளாக போகோஹாரம் விரும்புகிறது, காரணம் அதிகாரிகள் இவர்களை முழுதும் பரிசோதனை செய்வதில்லை என்பதாகும்.

மூலக்கதை