நெடுக்கேணியில் யானை தாக்கி ஒருவர் பலி!
வவுனியா நெடுக்கேணி சேனப்பிளவு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயதான கணபதிப்பிள்ளை மனோகரசீலன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டிலிருந்து வயல் வெளிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.