தூத்துக்குடி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கேரள வாலிபர் பலி

மாலை மலர்  மாலை மலர்
தூத்துக்குடி அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்து கேரள வாலிபர் பலி

தூத்துக்குடி, மார்ச் 31–

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறைச்சாலை பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் வைக்கோல் ஏற்றுவதற்காக தூத்துக்குடி வழியாக ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் டிரைவர் உள்பட 9 லோடுமேன்கள் இருந்தனர்.

புதியம்புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த லோடு மேன் உன்னிக்குட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் டிரைவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பலியான உன்னிக்குட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை