மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கு: சகன்புஜ்பால், குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மாலை மலர்  மாலை மலர்
மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கு: சகன்புஜ்பால், குடும்பத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மும்பை, மார்ச்.31-

மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கில் சகன்புஜ்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 11 ஆயிரத்து 150 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மும்பை செசன்சு கோர்ட்டில் அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்தனர்.

டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கடந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டது. இதை கட்டியதில் ஊழலில் ஈடுபட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பொது பணித்துறை மந்திரி சகன் புஜ்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சகன் புஜ்பால் மற்றும் அவரது உறவினர் சமீர் புஜ்பால் ஆகியோர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை மும்பை செசன்சு கோர்ட்டில் நேற்று அமலாக்கப்பிரிவினர் தாக்கல் செய்தனர்.

11 ஆயிரத்து 150 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் சகன் புஜ்பால், அவரது குடும்பத்தை சேர்ந்த சமீர் புஜ்பால், பங்கஜ் புஜ்பால் மற்றும் தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை