வல்லவனுக்கு வல்லவன் டப்பிங்கை தொடங்கிய பாபி சிம்ஹா

மாலை மலர்  மாலை மலர்
வல்லவனுக்கு வல்லவன் டப்பிங்கை தொடங்கிய பாபி சிம்ஹா

‘ஜிகர்தண்டா’ படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாபி சிம்ஹா. தனக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்த அசால்ட் என்ற பெயரில் தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார் பாபி சிம்ஹா.

விஜய் தேசிங்கு இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணியை இன்று தொடங்கியுள்ளனர். இதற்காக பூஜை போடப்பட்டு, பின்னர் டப்பிங் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ ஷிவேதா நடித்துள்ளார்.

இப்படத்தை தவிர்த்து, ‘கோ 2’ மற்றும் ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்கள் பாபி சிம்ஹா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

மூலக்கதை