பேனர்களுக்கு பாலாபிஷேகம்: ரஜினிகாந்துக்கு கோர்ட்டு நோட்டீஸ்

மாலை மலர்  மாலை மலர்
பேனர்களுக்கு பாலாபிஷேகம்: ரஜினிகாந்துக்கு கோர்ட்டு நோட்டீஸ்

பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது தொடர்பான வழக்கில் ரஜினிகாந்துக்கு பெங்களூர் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பெங்களூரில் நடிகர் ரஜினிகாந்தின் புதிய படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் அவரது பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடுகிறார்கள்.

இதை எதிர்த்து பெங்களுர் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதால் பால் வீணாக்கப்படுவதாகவும், இதை தடுக்க வேண்டும்’’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மூலக்கதை