கணவர் தாக்குதல்: மனைவியின் 6 மாத கரு கலைந்தது - மகளிர் போலீசார் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு

மாலை மலர்  மாலை மலர்
கணவர் தாக்குதல்: மனைவியின் 6 மாத கரு கலைந்தது  மகளிர் போலீசார் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு

தாம்பரம், மார்ச்.30–

பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சாலமன் ராஜா. இவரது மனைவி நான்சிஜெனிபர். அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சாலமன்ராஜா காலால் மனைவி வயிற்றில் எட்டி உதைத்தார். இதில் நான்சி ஜெனிபரின் கர்ப்பம் கலைந்தது.

இதுகுறித்து பல்லாவரம் போலீசார் ராஜாவை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி இது குடும்ப பிரச்சினை. இதை எப்படி பல்லாவரம் சட்டம்–ஒழுங்கு போலீசார் விசாரிக்க முடியும். என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை மகளிர் போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து சாலமன் ராஜாவை தாம்பரம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

மூலக்கதை