படகில் எந்திர கோளாறு: நடுக்கடலில் தவித்த 5 மீனவர்கள் மீட்பு

மாலை மலர்  மாலை மலர்
படகில் எந்திர கோளாறு: நடுக்கடலில் தவித்த 5 மீனவர்கள் மீட்பு

மாமல்லபுரம், மார்ச்.30–

கல்பாக்கம் அருகே மெய்யூர் குப்பத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி தனக்கு சொந்தமான படகில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த செல்வம், மரக்கானம் முருகன், செல்வம், கொக்கிலமேடு ரவிக்குமார் ஆகியோருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

6 கடல் மைல் தொலைவில் சென்றபோது படகின் எந்திரம் பழுதானது. பழுதை நீக்க முயற்சித்தும் முடியவில்லை. வேறு படகுகளும் தென்படாததால் மாலை 3 மணிவரை செய்வதறியாமல் நடுக்கடலில் தவித்தனர்.

பின்னர் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்து மாமல்லபுரம் கடலோர காவல் படை ஆய்வாளர் வேலு உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையில் கடலேர காவல் போலீசார் பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலுக்குள் சென்று 5 பேரையும் மீட்டு மாலை அழைத்து வந்தனர்.

மூலக்கதை