அணுவாயுதங்களை பயன் படுத்த எந்நேரமும் தயாராகயிருக்குமாறு கிம்ஜொங் உன் இராணுவத்துக்கு உத்தரவு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
அணுவாயுதங்களை பயன் படுத்த எந்நேரமும் தயாராகயிருக்குமாறு கிம்ஜொங் உன் இராணுவத்துக்கு உத்தரவு

வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் அணுவாயுதங்களை பயன்படுத்துவதற்கு தயாராகயிருக்குமாறு தனது இராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

வடகொரியாவின் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள இந்த தகவலை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதட்டநிலை மேலும் அதிகரித்துள்ளது.

புதன்கிழமை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை வடகொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ள நிலையிலேயே அந்த நாட்டு அதிபரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடகொரியா இராணுவத்தினரால் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள ரொக்கட் லோஞ்சர்கள் தொடர்பான ஓத்திகையின்போதே கிம் ஜொங் அன் இதனை தெரிவித்துள்ளார். வடகொரியாவின் புதிய ஆயுதம் தென்கொரியாவை தாக்க கூடிய சக்திவாய்ந்தது என கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

மூலக்கதை