பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கித் தொகுதிக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
மடு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கு வடக்கு மாகாண கிராம அபிவிரூத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2015ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து
ரூபாய் 2,50,000-00 நிதி ஒதுக்கப்பட்டு ஏற்க்கனவே கடந்த ஆண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்க்கான காசோலையினை 27-01-2016 புதன் கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் வைத்து பாடசாலையின் பிரதி அதிபர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார் அமைச்சர் டெனிஸ்வரன்.
2016-01-27