ஒரு தேசமாக முன்னோக்கி செல்ல வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
Tuesday, 26 January 2016 05:26
உலகில் அபிவிருத்தியடைந்த ஒரு தேசமாக முன்னோக்கி செல்வதற்கு இலங்கையர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மதத்தையும், எந்தவொரு இனத்தையும் சேர்ந்தோராக இருப்பினும் ஒரே இலங்கை மக்களாக நாம் உலகின் முன் தோன்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கும் சம கல்வி வாய்ப்பை வழங்கி சமத்துவம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றை கொண்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதல் அரசின் எதிர்பார்ப்பு ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.