ரஜினி தரிசனம் எதனால்?
Wednesday, 13 January 2016 08:14
ஒருநாளும் இல்லாத திருநாளாக இந்த வருஷத்தின் துவக்க நாளன்று சூப்பர் ஸ்டார் ரஜினி தன் ரசிகர்களுக்காக வாசலுக்கு வந்து தரிசனம் கொடுத்தார்.
இதனால் ரசிகர்கள் குஷி. வெளியூரிலிருக்கும் பல ரசிகர்கள், நமக்கும் முன்னாடியே தெரிஞ்சுருந்தா வந்திருக்கலாமே என்று கவலைப்பட்டது தனிக்கதை. சரி... ஏன் எந்த வருஷமும் இல்லாத வழக்கமாக இந்த வருஷம் தோன்றினார் ரஜினி? அது மிக நல்ல விஷயம்தான். இந்த வெள்ளத்தின் போது தமிழகம் முழுக்க இருக்கிற ரசிகர்கள், தாங்கள் சேகரித்த அத்யாவசியப் பொருட்களை மண்டபத்துக்கு அனுப்பி வைத்தார்களாம். அதைதான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகித்திருக்கிறது ரஜினி தரப்பு. இப்படி ஆபத்து நேரத்தில் தாமாக முன் வந்து உதவிய ரசிகர்களுக்கு உற்சாகம் தர வேண்டும் என்றால் ஒரே வழி, இந்த தரிசன திட்டம்தான். அதுபோக மலேசியா ரசிகர்களை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுக்க அனுமதித்தவர், நமக்கு அந்த வாய்ப்பை தரவில்லையே என்று இங்கிருப்பவர்கள் நினைத்துவிடக் கூடாதில்லையா? அதற்காகவும்தான். எப்படியோ...? ரஜினியின் முகம் பார்த்த ரசிகர்களுக்கு இந்த வருஷப்பலன் அமோகமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.