என்னை சாக்லெட் பாய்னு சொல்லாதீங்க. - மாதவன்
Friday, 15 January 2016 06:41
கிட்டதட்ட நான்கு வருடங்கள் கழித்து தமிழில் மாதவன் நடித்த ஒரு படம் வரப்போகிறது.
படத்தின் பெயர் இறுதிச்சுற்று. (மாதவனுக்கு இது மீண்டும் முதல் சுற்றாக அமையட்டும்) இதில் குத்து சண்டை வீரராக நடித்திருக்கிறார் அவர். “எவ்ளோ நாளைக்குதான் என்னை சாக்லெட் பாய்னு கூப்பிடுவிங்க. எப்படியாவது அந்த பெயரை மாத்திடணும்னு நினைக்கிறேன். ஆனால் முடிய மாட்டேங்குது. இந்த படம் வந்து மாத்தும்னு நம்புறேன்” என்று அவர் சொன்னாலும், நமக்கு திரையிடப்பட்ட சில காட்சிகள், மறுபடியும் அவரை சாக்லெட் இமேஜுக்குள்தான் அடைத்தது. ஏன்? இவருக்கும் ஹீரோயினுக்கும் நடுவேயிருந்த கெமிஸ்ட்ரி அப்படி. ரித்திகா சிங் என்ற அந்த பஞ்சாபி பெண் ஒரு நிஜமான குத்து சண்டை வீராங்கனையாம். “எனக்கு மேடிய புடிக்கும். அதனால் நான் வீராங்கனை என்பதையும் மறந்து விழுந்திட்டேன்” என்றார் சர்க்கரை தூக்கலாக. பார்த்து மேடி, பஞ்சாப்ல வச்சு தூக்கிடப் போறாங்க!