சாதி மீது நம்பிக்கையில்லை! பூ பார்வதி பளிச்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
சாதி மீது நம்பிக்கையில்லை! பூ பார்வதி பளிச்

Thursday, 14 January 2016 07:43

பூ, சென்னையில் ஒருநாள், மரியான் என்று பார்வதி மேனனின் அழகையும் நடிப்பையும் எடுத்துச் சொல்ல தமிழில் சில படங்கள் உண்டு.

பூ படம் வந்த பின், தமிழ்நாட்டிலிருந்து ஸ்பெஷல் ட்ரெய்ன் விடுகிற அளவுக்கு ஒரு இயக்குனர் கூட்டம் அவரை மொய்த்து எடுக்க, “நல்ல கதையா, என் மனசுக்கு பிடிச்ச கதையா இருந்தா மட்டும்தான் என் கால்ஷீட் கிடைக்கும். இல்லேன்னா இல்லதான்” என்று கூறியிருந்தார் அவர். தற்போது அவர் நடித்து ஒரு படம் வரப்போகிறது. பெங்களூர் நாட்கள் என்பதுதான் படத்தின் பெயர். இதில் உடல் ஊனமுற்ற பெண்ணாக நடித்திருக்கிறார் பார்வதி. இங்கு பிரஸ்சை மீட் பண்ணிய அவர், “எல்லாரும் என்னை பார்வதி மேனன்னு எழுதுறீங்க. ப்ளீஸ்... இனிமே அப்படி எழுதாதீங்க. எனக்கு ஜாதி, மதம், மேலெல்லாம் நம்பிக்கை இல்லை” என்றார். ஜனனி அய்யர்னு ஒரு நடிகை, லட்சுமி மேனன்னு ஒரு நடிகை, பார்வதி நாயர்னு ஒரு நடிகை... இப்படி தமிழ்நாட்டை ரவுண்டு கட்டிய ஒருவரும் இதுக்கு முன்னாடி இப்படி சொன்னதில்லையே? அதற்காகவே பார்வதிக்கு வந்தனம்.

மூலக்கதை