​புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான ப்ரீமியம் சுமையை குறைக்கும் வகையிலான புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ள நிலையில், இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் காப்பீடு ப்ரீமியத்துக்கான சுமை குறைக்கப்படுவதோடு, காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுமையாக, விரைவாக கிடைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய காப்பீடு திட்டத்தால், உணவு பயிர்களுக்கு அதிகபட்ச ப்ரீமியமாக 2.5 சதவிகிதமும், கோதுமைக்கு 1.5 சதவிகிதமும், இதர தானியங்களுக்கு 2.25 சதவிகிதம் வரையும் அதிகபட்ச ப்ரீமியம் வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் பண மானியம் சுமார் 7000 கோடியாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை