நடிகர் சிம்பு வெளிநாடு தப்பித்து செல்லாமல் தடுக்க விமானநிலையத்தில் கண்காணிப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
நடிகர் சிம்பு வெளிநாடு தப்பித்து செல்லாமல் தடுக்க விமானநிலையத்தில் கண்காணிப்பு

நடிகர் சிம்பு வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, முக்கிய விமான நிலையங்களை, சென்னை காவல்துறையினர் உஷார்படுத்தியுள்ளனர்.

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து உருவாக்கிய பீப் பாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு - அனிருத் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

சிம்பு மீது வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்வதற்காக, 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். சிம்பு, தனது நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் பதுங்கி உள்ளாரா என சென்னை விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் சிம்பு வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களை காவல்துறையினர் உஷார்படுத்தியுள்ளனர். 

மூலக்கதை