மீனவர்கள் கைது: விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு ஜெ. கடிதம்
பதிவு செய்த நாள் : 5, ஜனவரி 2016 (21:9 IST)
மாற்றம் செய்த நாள் :5, ஜனவரி 2016 (21:9 IST)
மீனவர்கள் கைது: விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு ஜெ. கடிதம்
இலங்கை சிறைகளில் உள்ள 104 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினால் தொடர்ந்து கைது செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் சேர்த்து இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பலர் பல வாரங்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பண்டிகை காலத்தில் தங்கள் குடும்பத்தினருடன் அவர்கள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 66 படகுகளும் விடுவிக்கப்படாமல் உள்ளன.
தமிழ்நாடு மீனவர்களின் உணர்வுப்பூர்வமான இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதேசமயம், தற்போது இலங்கை சிறைகளில் உள்ள 104 மீனவர்கள் மற்றும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 66 படகுகளை உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
