அப்பா பேச்சு! கார்த்திக்ராஜா கவலை

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
அப்பா பேச்சு! கார்த்திக்ராஜா கவலை

Thursday, 07 January 2016 07:51

இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்டது பெரிய விஷயமாகிவிட்டது.

நாடெங்கிலும் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் ஒலித்து வருகிறது. பத்திரிகையாளர் சங்கங்கள் பல, “அப்படி கேட்டதற்கு இளையராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அறிக்கைகள் அனுப்ப, அப்செட் ஆகிவிட்டாராம் அவர். அவருக்கு பதிலாக அவரது மகன் கார்த்திக் ராஜா, “அப்பாவுக்கு எழுபது வயசுக்கும் மேலாகிவிட்டது. நெஞ்சுவலி காரணமாக ஆபரேஷனும் செய்திருக்கிறார். இந்த சம்பவம் அவரது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். விட்ருவீங்களா? விட்ருவீங்களா?

மூலக்கதை