எதையும் கணக்காகச் செய்யும் நாயகன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எதையும் கணக்காகச் செய்யும் நாயகன்

திரைச்செய்தி Sunday, December 27th, 2015

அதர்வா, கேத்ரீன் தெரசா.

அதர்வா நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘ஈட்டி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தின் வசூல் நிலவரமும் திருப்திகரமாக இருப்பதாகக் கேள்வி. இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் அதர்வா வின் படங்கள் தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித் துள்ளதாம். இதனால் உற்சாகத்தில் உள்ளார் அதர்வா. இந்நிலையில், இவர் அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் ‘கணிதன்’ என்ற படத்தின் முன்னோட்ட காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டன. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

‘கணிதன்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படப்புகழ் கேத்ரீன் தெரசா நடிக்கிறார். மேலும், இயக்குநர் கே.பாக்யராஜ், நரேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.என்.சந்தோஷ் இயக்கியிருக்கிறார். டிரம்ஸ் சிவமணி இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே படம் வெளியாகும் என தெரிகிறது.

இப்படத்தின் தலைப்பான ‘கணிதன்’ என்றால், கணக்கு பார்ப்பவர் என்று அர்த்தமாம். வீரத்துடன் இருப்பவர்களை வீரன் என்று சொல்வதுபோல், கணக்கு பண்ணி வாழ்கிறவனை கணிதன் என்று அழைப்பார்களாம். இப்படத்தில் அதர்வா எதையும் திட்டம் போட்டு கணக்காக செய்பவராம். அவரது கணக்கும் ஒரு சமயம் தவறாக முடிகிறது. அதை அவர் எப்படிச் சரி செய்தார் என்பதுதான் இப்படத்தின் கதை என்கிறார்கள் படக்குழுவினர்.

‘கணிதன்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் அதர்வா, கேத்ரீன் தெரசா

மூலக்கதை