சிம்புவுக்கு நாம்தான் உதவவேண்டும் - ஏ.ஆர்.ரகுமான்
திரைச்செய்தி Sunday, January 3rd, 2016
“நம் துறையைச் சார்ந்த ஒரு இளம் கலைஞருக்குப் பிரச்சினை. ‘பீப்’ பாடலால் மிகவும் வேதனை யில் இருக்கும் சிம்புவிற்கு இந்த நேரத்தில் நாம்தான் கைகொடுத்து உதவவேண்டும். சிம்பு நடித்துள்ள படத்தின் முன்னோட்டக் காட்சியை இப்போது வெளியிட்டால் சிம்புவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்,” என்று கூறியுள்ளார் ரகுமான்.‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ‘டிரெய்லர்’ இப்போது வெளியாகி சிம்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ்ச் சினிமாவின் பெரு மையை இந்திய அளவிற்கு எடுத் துச் சென்றவர் ரகுமான். இவர் இப்போது ‘அச்சம் என்பது மடமை யடா’, ‘24’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ‘அச்சம் என்பது மடமை யடா’ படத்தின் ‘டிரெய்லர்’ வெளி யாகி சிம்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெறும் ஒரு நிமிடத்திற்குச் சற்று அதிகமாக ஓடும் இந்த டிரெய்லர் வெளியானதன் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமான் இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
‘அச்சம் என்பது மடமையடா’ பட இயக்குநர் கௌதம் மேனன், இப்படத்துக்கு இசை அமைத்துள்ள ஏஆர் ரகுமான், சிம்பு. படங்கள்/செய்திகள்: தகவல் சாதனம்