இரண்டாம் நிலை நாயகர்களுடன் நடித்து கோடிகளை அள்ளும் நாயகி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரண்டாம் நிலை நாயகர்களுடன் நடித்து கோடிகளை அள்ளும் நாயகி

திரைச்செய்தி Saturday, January 2nd, 2016

நிக்கி கல்ராணி

இரண்டாம் நிலை நாயகர்களாக வலம் வருபவர்கள் ஜீவா, பாபி சிம்ஹா, விஷ்ணு, விக்ரம் பிரபு, சிபிராஜ் ஆகியோர். அவர்களுடன் நடிக்க முன்னிலை நாயகிகளான நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா, சுருதிஹாசன், காஜல் அகர்வால், அனுஷ்கா ஆகியோர் பல கோடிகளை கூசாமல் கேட்கின்றனர்.

அதனால் இரண்டாம்நிலை கதா நாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகிகளை ஜோடியாக்க தயங்குகிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனால் லட்சங்களில் சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம். ‘டார்லிங்’ வெற்றிப்படத்தில் நடித்ததாலோ என்னவோ அப்படத்தின் நாயகியான நிக்கி கல்ராணிக்கு நிறைய புதுப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பாபிசிம்ஹாவுடன் ‘கோ-2’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’, ராகவா லாரன்ஸுடன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் எழில் இயக்கத்தில் விஷ்ணுவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘வெள்ளக்கார துரை’ படத்திற்குப் பிறகு எழில் இயக்கும் படம் இது. இப்படத்திற்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். ‘கோ-2’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களில் பத்திரிகை நிருபராக நடித்து வரும் நிக்கி கல்ராணி, எழிலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மூலக்கதை