காவல்துறை, காதல் சம்பந்தப்பட்ட ‘கோடை மழை’

தமிழ் முரசு  தமிழ் முரசு
காவல்துறை, காதல் சம்பந்தப்பட்ட ‘கோடை மழை’

திரைச்செய்தி Tuesday, December 29th, 2015

‘கோடை மழை’ படத்தில் கண்ணன், ஸ்ரீபிரியங்கா.

யாழ் தமிழ்த்திரை நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கோடை மழை’. இதில் கண்ணன் கதா நாயகனாக நடித்துள்ளார். கதா நாயகி ஸ்ரீபிரியங்கா. இவர்களுடன் இயக்குநர் களஞ்சியம் காவல்துறை அதிகாரியாக முக்கிய பாத்திரத்தில் வருகிறார். இமான் அண்ணாச்சி உள்பட மேலும் பலர் நடிக்கிறார்கள். வைரமுத்துவின் வரிகளுக்கு சாம்பசிவம் இசை அமைத்துள் ளார். எழுத்து, இயக்கம் கதிரவன்.

“நான் பிரபுதேவாவிடம் உதவியாளராகப் பணி புரிந்திருக்கிறேன். ‘கோடை மழை’ எனக்கு முதல் படம். இந்த படத்தின் நாய கன் ராணுவத்தில் பணிபுரிகிறார். கோடை விடுமுறையில் ஊருக்கு வருகிறார். அப்போது நடக்கும் கதை என்பதால் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறோம். “இது காதல் கதை. என்றாலும், திரைக்கதையை வித்தியாசமாக அமைத்திருக்கிறேன். நான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் பிறந்தவன்.

‘கோடை மழை’ படத்தில் கண்ணன், ஸ்ரீபிரியங்கா.

மூலக்கதை