சாந்தினி: கவர்ச்சிக்கு நான் எதிரி அல்ல

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாந்தினி: கவர்ச்சிக்கு நான் எதிரி அல்ல

திரைச்செய்தி Thursday, December 24th, 2015

சாந்தினி

கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் இப்போது நான் தேர்வு செய்து நடிப்பது போன்ற கதாபாத்திரங்கள் எப்போதுமே தேடி வராது,” என்கிறார் சாந்தினி. தனிப்பட்ட வகையிலும் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிப்பதுதான் அம்மணிக்குப் பிடித்திருக்கிறதாம். குடும்பப்பாங்கான வேடங்கள் என்றால் உடனே இயக்குநர் தன்னைத் தேடி வருவதே தனக்குக் கிடைத்த வெற்றி என்கிறார்.

“எனது தனித்துவத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் இதைக் கருதுகிறேன். அதேசமயம் நான் கவர்ச்சிக்கு எதிரானவள் என்றும் நினைக்க வேண்டாம். தேவை ஏற்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்க தயங்க மாட்டேன். எனினும் கவர்ச்சிக்கு என நான் எல்லை வகுத்து இருக்கிறேன். அதை மீறாத வரை சிக்கல் இல்லை. “நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின மகன் கவுதம் இயக்கி இருக்கும் ‘கண்ணுல காசு காட்டப்பா’ என்ற படத்தில் என்னை ஓரளவு கவர்ச்சியாக பார்க்க முடியும்,” என்று சொல்லும் சாந்தினி அடுத்து ‘வில் அம்பு’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘போர்க்குதிரை’, ‘என்னோடு விளையாடு’, ‘நையப்புடை’ என அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மூலக்கதை