அலட்டிக்கொள்ளாத காஜல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அலட்டிக்கொள்ளாத காஜல்

திரைச்செய்தி Wednesday, December 23rd, 2015

காஜல் அகர்வால்

விக்ரம் தற்போது ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூசை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்தில் விக்ரம் தாடி வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ அல்லது ‘மாரீசன்’ என்று தலைப்பு வைக்க இருப்ப தாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாராவும் நித்யா மேனனும் நடித்து வருகிறார்கள்.

இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வால் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் காஜல் அகர்வால் நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தற்போது விக்ரம் அடுத்ததாக திரு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு காஜல் அகர்வாலை ஒப்பந் தம் செய்திருப்பதாகத் தகவல் வெளி யாகி இருக்கிறது.

படக்குழுவினரிடம் இந்த விஷயம் குறித்து விசாரித்தபோது, அவர்கள் மறுத் திருக்கிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி யாகும் என்றும் கூறுகிறார்கள். விக்ரமுடன் நடிக்க இருந்த முதல் வாய்ப்பை தவறவிட்ட காஜல் அகர் வால், தற்போது அந்த வாய்ப்பைப் பிடிப்பாரா? என்று ரசிகர்கள் மத்தி யில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இது குறித்து காஜல் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரிய வில்லை.

மூலக்கதை