அகதியின் போர்வையில் அல் கொய்தா தீவிரவாதி: அதிரடி நடவடிக்கை எடுத்த சிசிலி தீவு அதிகாரிகள்

NEWSONEWS  NEWSONEWS
அகதியின் போர்வையில் அல் கொய்தா தீவிரவாதி: அதிரடி நடவடிக்கை எடுத்த சிசிலி தீவு அதிகாரிகள்

தீவிரவாத செயல்பாடு காரணமாக இத்தாலி அரசால் கடந்த 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட Ben Nasr Mehdi, 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில் போலி ஆவணங்கள் தயார் செய்துகொண்டு வடக்கு ஐரோப்பாவில் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து

அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், அவரது கைரேகைகளை வைத்து உறுதி செய்துள்ளனர்.

கடந்த மாத துவக்கத்தில் 200 அகதிகளுடன் தத்தளித்த படகில் மெஹதியுடன் மேலும் 3 நபர்களை சிசிலி தீவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து துனிசிய அதிகாரிகளிடம் தீவிரவாதி மெஹ்தியை ஒப்படைத்த அதிகாரிகள் இந்த தகவல்களை வெளிவிட தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு இத்தாலியின் Novellara பகுதியில் இருந்து மெஹ்தியை கைது செய்த போது அவரது குடியிருப்பில் இருந்து டெட்டனேட்டர்கள்,

கொரில்லா போருக்கான கையேடுகள் என பல்வேறு பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

மிகவும் ஆபத்தான தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் Mehdi மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜிகாதிகளை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

மூலக்கதை